Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாம், போலீஸ் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பில் விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்லாம், போலீஸ் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பில் விசாரணை

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 27-

சமூக ஊடகத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி பரவலாகிவரும் காணொலியில் ஆடவர் ஒருவர் இஸ்லாம் சமயத்தையும் அரச மலேசிய போலீஸ் படையையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அவ்விவகாரம் தொடர்பில் இதுவரையில் 21 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்நபர், ஜெர்மனி, ஹாம்பர்க்-க்கில் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நாட்டிலிருந்து வெளியேறி விட்டதாக கூறிய ரசாருதீன் ஹுசைன், அவ்விவகாரம் தொடர்பில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

சர்ச்சைக்குரிய காணொலியில் உள்ள அந்த நபர், இஸ்லாம் சமயத்தை இழிவுபடுத்தியதுடன் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் தொடர்பான விவகாரங்களில் போலீசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்ததாக ரசாருதீன் ஹுசைன் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்