Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாம், போலீஸ் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பில் விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்லாம், போலீஸ் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பில் விசாரணை

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 27-

சமூக ஊடகத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி பரவலாகிவரும் காணொலியில் ஆடவர் ஒருவர் இஸ்லாம் சமயத்தையும் அரச மலேசிய போலீஸ் படையையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அவ்விவகாரம் தொடர்பில் இதுவரையில் 21 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்நபர், ஜெர்மனி, ஹாம்பர்க்-க்கில் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நாட்டிலிருந்து வெளியேறி விட்டதாக கூறிய ரசாருதீன் ஹுசைன், அவ்விவகாரம் தொடர்பில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

சர்ச்சைக்குரிய காணொலியில் உள்ள அந்த நபர், இஸ்லாம் சமயத்தை இழிவுபடுத்தியதுடன் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் தொடர்பான விவகாரங்களில் போலீசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்ததாக ரசாருதீன் ஹுசைன் தெளிவுப்படுத்தினார்.

Related News

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது