Jun 23, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்

Share:

ஜோகூர் மாநிலத்தில் உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில், செடெனாக் மற்றும் குலாய்இடையிலான கி.மீ. 31.8 பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் பல லாரிகள் மற்றும் கார்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்த கோர விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இருப்பினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பல கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் தீயில் முழுமையாக சிக்கி எரிவதைக் காண முடிகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்பு மற்றும் அவசர உதவி பணிகளும் சம்பவ இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News

வாகன பரிசோதனை சேவையை மேம்படுத்த 100 புதிய பரிசோதகர்களை நியமிக்கிறது புஸ்பாகோம்

வாகன பரிசோதனை சேவையை மேம்படுத்த 100 புதிய பரிசோதகர்களை நியமிக்கிறது புஸ்பாகோம்

வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி - டத்தோஶ்ரீ ரமணன்

வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி - டத்தோஶ்ரீ ரமணன்

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை

கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை

ஈப்போ மேல்நிலைப் பள்ளி  கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்

ஈப்போ மேல்நிலைப் பள்ளி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்

ஜப்பானிலுள்ள மலேசிய யானைகளை மீண்டும் தாய்நாட்டிற்குக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் கோரிக்கை

ஜப்பானிலுள்ள மலேசிய யானைகளை மீண்டும் தாய்நாட்டிற்குக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் கோரிக்கை