Jun 23, 2026
Thisaigal NewsYouTube
வாகன பரிசோதனை சேவையை மேம்படுத்த 100 புதிய பரிசோதகர்களை நியமிக்கிறது புஸ்பாகோம்
தற்போதைய செய்திகள்

வாகன பரிசோதனை சேவையை மேம்படுத்த 100 புதிய பரிசோதகர்களை நியமிக்கிறது புஸ்பாகோம்

Share:

வாகன பரிசோதனை சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், சாலைப் பாதுகாப்பு தரநிலைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு, நாடு முழுவதும் இவ்வாண்டு 100 புதிய வாகன பரிசோதகர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக புஸ்பாகோம் அறிவித்துள்ளது.

புதிய பணியாளர்கள் இணைவதன் மூலம், வாகன பரிசோதனைக்காக காத்திருக்கும் நேரம் குறைக்கப்படும், சேவை செயல்திறன் மேம்படும் மற்றும் புதிய பரிசோதனைத் திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கையும், விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புஸ்பாகோம் தலைமைச் செயல் அதிகாரி மஹ்மூத் ரசாக் பஹ்மான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆட்சேர்ப்பு முயற்சி, மனித வளம், பாதுகாப்பு மற்றும் சேவைத் தரம் ஆகியவற்றில் நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீட்டிற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவையை வழங்குவதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்

ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்

வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி - டத்தோஶ்ரீ ரமணன்

வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி - டத்தோஶ்ரீ ரமணன்

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை

கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை

ஈப்போ மேல்நிலைப் பள்ளி  கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்

ஈப்போ மேல்நிலைப் பள்ளி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்

ஜப்பானிலுள்ள மலேசிய யானைகளை மீண்டும் தாய்நாட்டிற்குக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் கோரிக்கை

ஜப்பானிலுள்ள மலேசிய யானைகளை மீண்டும் தாய்நாட்டிற்குக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் கோரிக்கை