May 20, 2026
Thisaigal NewsYouTube
இன்னொரு அரசியல் அலையை நாடு தாங்காது. அரசை கவிழ்கும் முயற்சியை கைவிடுவீர்.
தற்போதைய செய்திகள்

இன்னொரு அரசியல் அலையை நாடு தாங்காது. அரசை கவிழ்கும் முயற்சியை கைவிடுவீர்.

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் நடந்துவரும் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தால் நாட்டின் நிலைமை மிக மோசமாக நிலைக்கு தள்ளப்படும் என மலேசிய பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கருத்து தெரிவித்துள்ளார். பெர்சத்து கட்சியைச் சேர்ந்த முகமட் ஃபாயிஸ் நா அமான் தனது முகநூல் பக்கத்தில் 126.. என்று எழுதி பதிவை வெளியிட்டு அரசியல் புதிர் போட தேவையில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

இன்னொரு அரசியல் மாற்றத்தை நாடு ஏற்காது என்றும் அன்வார் தலைமைத்துவத்தின் கீழ் அண்டை நாடுகளுடனான உறவுகள் வலுபெற்று வருகின்றது என அவர் மேலும் கூறினார். மேலும், ஒரு அரசியல் மாற்றம் நிலவுமெனில் நாட்டின் பங்கு வர்த்தனை, பொருளாதாரம் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் வேலை செய்யும் உச்சாகம் என அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதை ஆட்சியைக் கவிழ்க நினைப்பவர்களில் கருத்தில் கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நடப்பு அரசாங்கம் நாட்டை மீட்கும் நோக்கத்தோடு செயல் கொண்டிருப்பதால் , முதலில் தங்களை வேலை செய்ய விடுமாறு பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கேட்டுக் கொண்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு