Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

Share:

போர்ட் டிக்சன், மார்ச் 11 -

மிக அபாயகரமாக வாகனத்தை செலுத்தி முதியவர் ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 20ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

23 வயது G. கிருஷ்ணகுமார் என்ற அந்த ஆடவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி இத்தண்டனையை விதித்தார்.

கிருஷ்ணகுமாரின் வாகனமோட்டும் லைசென்ஸ், 5 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டதுடன், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் அவருக்கு மேலும் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் தேதி இரவு 10.35 மணியளவில் போர்ட்டிக்சன், Jalan Seremban சாலையில் 5 ஆவது கிலோ மீட்டரில் தனது வாகனத்தில் முதியவர் ஒருவரை மோதித்தள்ளி மரணம் விளைவித்ததாக கிருஷ்ணகுமார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஒரு துப்பரவு பணியாளரான கிருஷ்ணகுமார் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்