May 22, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினரின் ஆட்சியை விட, நடப்பு அரசாங்கத்தில் பொருட்களின் விலை மலிவாக உள்ளது!
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினரின் ஆட்சியை விட, நடப்பு அரசாங்கத்தில் பொருட்களின் விலை மலிவாக உள்ளது!

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 01 -

முந்தைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பிலுள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ், அடிப்படை உணவு பொருட்களான கோழி, முட்டை, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை இன்னமும் குறைவாகவும் நிலையாகவும் உள்ளதென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கை செலவின அதிகரிப்பை எதிர்கொள்ள மடானி அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என கூறிவரும் சில தரப்பினரையும் நிதியமைச்சருமான அவர் சாடினார்.

2021, 2022,2022 ஆகிய ஆண்டுகளில் கோழி விலை கிலோ ஒன்றுக்கு 13 வெள்ளியாக இருந்தது. தற்போது, கிலோ ஒன்றுக்கு 9 வெள்ளி அல்லது 9 வெள்ளி 50 சென்னாக அது இருப்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இப்பொழுது உள்ள எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை வழிநடத்திய போது, 5 கிலோ எடையிலான சமையல் எண்ணெய் 45 வெள்ளி முதல் 50 வெள்ளி வரையில் இருந்தது. தற்போது வெறும் 27 வெள்ளியாக உள்ளது. முன்பு, சந்தையில் முட்டை கையிருப்புக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில், தற்போது, அத்தகைய சூழல் இல்லாததை எதிர்க்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் நினைவுறுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு