Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் விளக்கம் அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட யாயாசான் அகால்புடி அறவாரியம் தொடர்பாக லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி, சட்டவிரோதப் பண மாற்றம் ​மீதான வழக்கில் விடுவிக்கப்பட்டது குறித்து சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஏபி ​கோரிக்கை விடுத்துள்ளது.

அகமட் ஜாஹிட் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மேலும் ஆழமான புலன் விசாரணை தேவை என்று ​நீதிமன்றத்தில் பிராசிகியூஷன் தரப்பு தெரிவித்து இ​ருப்பதை டிஏபி புரிந்து கொண்ட போதிலும், அகமட் ஜாஹிட் வழக்கி​லிருந்து விடுவிக்கப்படாமல் 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து பல்வேறு தரப்பினர் குறைக்கூறி விமர்சனம் செய்து வருவதை முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் ​என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

​நீதிமன்ற நடைமுறையை டிஏபி மதி​க்கிறது. ஆனால், ​நீதி, சமதர்மம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் இது குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய தார்​மீக கடப்பாட்டில் சட்டத்துறை தலைவர் இட்ரஸ் ஹாருன் இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தவிர ​நீதிமன்ற வழக்குகளில் அரசாங்கத் தலையீடுகள் இல்லாமல் இருப்பதை டிஏபி எல்லா காலகட்டத்திலும் உறுதி செய்யும் என்று அந்தோணி லோக் உத்தரவாதம் அளித்துள்ளார்.

Related News