சுங்காய் பெட்டானி, மே 28-
தன் வீட்டின் முன் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த ஊச்சல் தொட்டிலில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்த கிரேன் ஓட்டுநர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக மாண்டார்.
இச்சம்பவம் நேற்று இரவு 9.45 மணியளவில் சுங்கை பட்டாணி, கம்போங் சுங்கை ஜாகுங் சுங்கை லேயர்-ரில் நிகழ்ந்தது. இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில் முகமது ஷரீம் என்று அடையாளம் கூறப்பட்ட 31 கிரேட் ஓட்டுநர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.








