கோலாலம்பூர், மே 03-
பிரபல முதலீட்டு நிறுவனமான Goldman Sachs -யை போன்று ஆள்மாறாட்டம் செய்து 41 பேரிடம் சுமார் 11.4 மில்லியன் வெள்ளியை மோசடி செய்த சிண்டிகேட் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சிலாங்கூர், ஜொகூர், நெகிரி செம்பிலான், பேராக், கெடா, பினாங்கு உட்பட சரவாக் ஆகிய இடங்களில் மேற்கொண்ட Operation Nuri 7/24 திடீர் சோதனையின் போது இத்தகைய செயல்களை புரியும் சிண்டிக்கேட்டுகள் முறியடிக்கப்பட்டதாக மத்திய வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யுசோப் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது 21க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரை சேர்ந்த 10 ஆண்கள் உட்பட 2 பெண்களும் கைது செய்யப்பட்டதாக ரம்லி முகமது கூறினார்.
பாதிக்கப்பட்ட 41 பேரிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிண்டிகேட்டுகள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தகவலளித்தார்.








