Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பின் கூடுதல் உத்தரவு விவாகரத்தில் என்னை தொடர்புபடுத்தாதீர்கள்- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

நஜீப்பின் கூடுதல் உத்தரவு விவாகரத்தில் என்னை தொடர்புபடுத்தாதீர்கள்- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்

Share:

காஜாங், ஏப்ரல் 19-காஜாங்

முன்னாள் பிரதமர் டத்தேஸ்ரீ நஜீப் துன் ரசாக், தமது எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்ப்டடுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் தம்மை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரத்தில் கருத்து சொல்லவோ, விவாதிக்கவோ தாம் விரும்பவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி பொதுமன்னிப்பு வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற நாட்டின் முன்னாள் பிரதமர் சுல்தான் அப்துல்லா, தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி, அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் சீராய்வு மனு ஒன்றை டத்தோஸ்ரீ நஜீப் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நஜீப்பிற்கு கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பிரதமர் அன்வாரிடம் கருத்து கேட்ட போது, இவ்விவகாரத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என்றார்.

இந்த விவகாரம் மன்னிப்பு வாரியத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். இது மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். இதனை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று காஜாங்கில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்