Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

இஸ்ரேலிய பிரஜைக்கு துப்பாக்கிகளை வழங்கியதற்காக உள்ளூர் தம்பதியர் மீது கிள்ளான் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டப்படவுள்ளது.

சமீபத்தில் ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவர் மீதும் இந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படவுள்ளதாக போலீஸ் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நபரை போலீசார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் அறிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து மேலும் தகவல்களை பெறவும், அண்டை நாட்டிலிருந்து கடத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் ஆடவரின் பிரதான நோக்கங்களை கண்டறியவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

Related News