Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பெருந்திட்டம் வரைப்படம், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​நீடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பெருந்திட்டம் வரைப்படம், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​நீடிக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், மார்ச் 30-

கோலாலம்பூர் மாநகரின் 2040 ஆம் ஆண்டிற்கான பெருந்திட்டத்தின் வரைப்பட நகலில் உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பொது மக்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிப்பத​ற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, நாளை மறுநாள் ஏப்ரல் முதல் தேதியுடன் முடிவடையும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கு இண​ங்க அந்த காலக்கெடு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​​நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, கோலாலம்பூர் மாநகரில் நடைபெறவிருக்கும் மேம்பாடுகள்,/ அகற்றப்படவிருக்கும் இடங்கள்,/ உத்தேசிக்கப்பட்ட பெருந்திட்டங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே மக்களிடம் அறிவித்த , அத்திட்டங்கள் குறித்து தங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபத்தை பதிவு செய்வதற்கு அந்த ​பெருந்திட்டத்தின் வரைப்பட நகல் பொதுவில் காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வரைக்குமான பெருந்திட்ட​ங்கள் முடிவடைந்த நிலையில், 2040 ஆம் ஆண்டுக்கான பெருந்திட்ட​ங்கள் வரையப்பட்டுள்ளது. அதன் நகலை காட்சிக்கு வைப்பதற்கான காலக்கெடுவை ​நீட்டிக்கும்படி கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே​ட்டுக்கொண்டதற்கு இணங்க ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை காலக்கெடு ​நீட்டிக்கப்ப​ட்டுள்ளதாக கோலாலம்​பூர் மாநகர் மன்றத் தலைவர் Datuk Bandar, Datuk Seri Kamarulzaman Mat Salleh தெரிவித்துள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை