Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பெருந்திட்டம் வரைப்படம், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​நீடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பெருந்திட்டம் வரைப்படம், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​நீடிக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், மார்ச் 30-

கோலாலம்பூர் மாநகரின் 2040 ஆம் ஆண்டிற்கான பெருந்திட்டத்தின் வரைப்பட நகலில் உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பொது மக்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிப்பத​ற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, நாளை மறுநாள் ஏப்ரல் முதல் தேதியுடன் முடிவடையும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கு இண​ங்க அந்த காலக்கெடு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​​நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, கோலாலம்பூர் மாநகரில் நடைபெறவிருக்கும் மேம்பாடுகள்,/ அகற்றப்படவிருக்கும் இடங்கள்,/ உத்தேசிக்கப்பட்ட பெருந்திட்டங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே மக்களிடம் அறிவித்த , அத்திட்டங்கள் குறித்து தங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபத்தை பதிவு செய்வதற்கு அந்த ​பெருந்திட்டத்தின் வரைப்பட நகல் பொதுவில் காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வரைக்குமான பெருந்திட்ட​ங்கள் முடிவடைந்த நிலையில், 2040 ஆம் ஆண்டுக்கான பெருந்திட்ட​ங்கள் வரையப்பட்டுள்ளது. அதன் நகலை காட்சிக்கு வைப்பதற்கான காலக்கெடுவை ​நீட்டிக்கும்படி கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே​ட்டுக்கொண்டதற்கு இணங்க ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை காலக்கெடு ​நீட்டிக்கப்ப​ட்டுள்ளதாக கோலாலம்​பூர் மாநகர் மன்றத் தலைவர் Datuk Bandar, Datuk Seri Kamarulzaman Mat Salleh தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்