May 22, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் பதற்றம் நிலவினாலும் போலீஸ் தானாகவே விசாரணையை மேற்கொள்ளாதா?
தற்போதைய செய்திகள்

நாட்டில் பதற்றம் நிலவினாலும் போலீஸ் தானாகவே விசாரணையை மேற்கொள்ளாதா?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றால் போலீஸ் விசாரணையை மேற்கொள்ளாது எனும் கூற்று, நாட்டில் உண்மையில் அப்படியொரு சட்டம் இருக்கின்றதா? என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் டத்தோ சயிட் இப்ராஹிம் கேள்வியை முன்வைத்துள்ளார்.

ஒருவேளை நாட்டில் பதற்றமான சூழல் நிலவினாலும் அது குறித்து புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், போலீஸ் தானாகவே முன்வந்து விசாரணையை மேற்கொள்ளாதா? எனவும் தனது X தள பதிவில் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் அம்னோவின் உயரிய தலைவர் என்பதால், அவருக்கு எதிராக போலீஸ் விசாரணையை மேற்கொள்ளவில்லை என தாம் சந்தேகிப்பதாக கூறிய டத்தோ சயிட் இப்ராஹிம், அந்த நபர் யார் என்ற முழு தகவலை குறிப்பிடவில்லை.

அவர் அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ்-வை குறிப்பிட்டே அந்த பதிவை இட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அல்லா சொல் கொண்ட காலுறை சர்ச்சை தொடங்கிய நேரத்தில் டாக்டர் அக்மால் சாலேஹ், வாள் கத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்தன.

இந்நிலை குறித்து பதிலளித்திருந்த தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன், டாக்டர் அக்மால் சாலேஹ்-வுக்கு எதிராக புகார் ஏதும் பெறப்படவில்லை என்றார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு