Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் பதற்றம் நிலவினாலும் போலீஸ் தானாகவே விசாரணையை மேற்கொள்ளாதா?
தற்போதைய செய்திகள்

நாட்டில் பதற்றம் நிலவினாலும் போலீஸ் தானாகவே விசாரணையை மேற்கொள்ளாதா?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றால் போலீஸ் விசாரணையை மேற்கொள்ளாது எனும் கூற்று, நாட்டில் உண்மையில் அப்படியொரு சட்டம் இருக்கின்றதா? என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் டத்தோ சயிட் இப்ராஹிம் கேள்வியை முன்வைத்துள்ளார்.

ஒருவேளை நாட்டில் பதற்றமான சூழல் நிலவினாலும் அது குறித்து புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், போலீஸ் தானாகவே முன்வந்து விசாரணையை மேற்கொள்ளாதா? எனவும் தனது X தள பதிவில் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் அம்னோவின் உயரிய தலைவர் என்பதால், அவருக்கு எதிராக போலீஸ் விசாரணையை மேற்கொள்ளவில்லை என தாம் சந்தேகிப்பதாக கூறிய டத்தோ சயிட் இப்ராஹிம், அந்த நபர் யார் என்ற முழு தகவலை குறிப்பிடவில்லை.

அவர் அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ்-வை குறிப்பிட்டே அந்த பதிவை இட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அல்லா சொல் கொண்ட காலுறை சர்ச்சை தொடங்கிய நேரத்தில் டாக்டர் அக்மால் சாலேஹ், வாள் கத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்தன.

இந்நிலை குறித்து பதிலளித்திருந்த தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன், டாக்டர் அக்மால் சாலேஹ்-வுக்கு எதிராக புகார் ஏதும் பெறப்படவில்லை என்றார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்