Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பாராங்கை ஏந்தியக்கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

பாராங்கை ஏந்தியக்கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Share:

கம்போங் மோரிப், மார்ச் 22.

இரண்டு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட ஓர் இந்திய ஆடவர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, சினிமா பாணியில் பாடல் பாடியவாறு மிரட்டும் தோரணையில் சென்ற காட்சியை கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த நபர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, பந்திங், ஜாலான் கம்போங் மோரிப் சாலையில் சென்ற சம்பவத்தை தொடர்ந்து, அந்நபர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அஹ்மத் ரித்வான் முஹம்மத் நோர் தெரிவித்தார்.

குடும்ப பிரச்னை காரணமாக அந்த நபர் வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு சென்றதாக நம்பப்படும் வேளையில் அவர் தற்போது 1958 ஆம் ஆண்டு அபாயரக ஆயுத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை