சபா, மே 30-
சபா-வில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 417 பிலிப்பீன்ஸ் கள்ளக்குடியேறிகள், அவர்களது தாயத்திற்கு நேற்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில், 349 ஆண்களும் 41 பெண்களும் 12 வயதுக்கு மேற்பட்ட 27 சிறார்களும் அடங்குவர்.
சண்டாக்கான்-னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் கப்பல் வழியாக, பிலிப்பீன்ஸிலுள்ள ஜாம்போங்கா நகரம் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டதாக, சபா குடிநுழைவுத்துறையின் இயக்குநர் டத்தோ எஸ் எச் சித்தி சலேஹா ஹபீப் யூசோஃப் தெரிவித்தார்.








