12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடு கட்டும் தச்சர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் மூன்று பிரம்படிகள் விதிக்க மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
24 வயது முகமது ஜாருல் ஹாஷிம் எம்டி நோர்டன் @நோர்டின் என்கிற அந்த தச்சர், நீதிபதி அபு பக்கர் மனாத் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மூவார், பத்து பஹாட், யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் மாலை 5 மணியளவில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.








