செப்பாங், மே 08-
நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை தருவதாக முகநூலில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்திற்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக மோசடியில் சிக்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
29 வயது லாவ் என்கிற அந்நபர் தாய்லாந்திலுள்ள ஒரு வங்கியில் மாதத்திற்கு 15,000 வெள்ளி சம்பளம் தருவதாக முகநூலில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தை கண்டு விண்ணப்பித்து பிறகு தாம் சிண்டிகேட்டுகளால் ஏமாற்றப்பட்டதாக புகார் கிடைக்கபெற்றதாக மலேசிய மனிதாபிமான அமைப்பின் பொதுச் செயலாளர் டத்தோ ஹிஷாமுதீன் ஹாஷிம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபரை தாய்லாந்தில் வேலை என்று கூறி மியன்மாருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவ்விடத்தில் அவர் கட்டாய தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் ஹிஷாமுதீன் ஹாஷிம் குறிப்பிட்டார்.
உணவு கொடுக்காமல், சிண்டிகேட்டுகளால் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 9,480 தொகையை பாதிக்கப்பட்டவர் செலுத்த உத்தரவிடப்பட்டதாக ஹிஷாமுதீன் ஹாஷிம் கூறினார்.
பிறகு, சம்பந்தப்பட்ட நபர் உட்பட அவருடன் மற்றொரு நபரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி எளிதில் ஏமாற வேண்டாம் என்று ஹிஷாமுதீன் ஹாஷிம் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.








