வீட்டில் வேலைக்கு அமர்த்ப்பட்டிருந்த ஓர் இந்தோனேசியப் பெண்ணை சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட புலன் விசாரணை முடிவடைந்த விட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து லாவகமாக தப்பி, கோலாலம்பூர் உள்ள இந்தோனேசியத் தூதகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ள 54 வயது இந்தோனேசியப் பெண் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் அந்த அரசியல்வாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ உமர் கான் குறிப்பிட்டார்.
அந்த இந்தோனேசியப் பெண், எட்டி உதைக்கப்பட்டு, உடல் மீது சுடுநீர் ஊற்றப்பட்டதாகவும், சொல்லொண்ணா துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


