வீட்டில் வேலைக்கு அமர்த்ப்பட்டிருந்த ஓர் இந்தோனேசியப் பெண்ணை சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட புலன் விசாரணை முடிவடைந்த விட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து லாவகமாக தப்பி, கோலாலம்பூர் உள்ள இந்தோனேசியத் தூதகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ள 54 வயது இந்தோனேசியப் பெண் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் அந்த அரசியல்வாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ உமர் கான் குறிப்பிட்டார்.
அந்த இந்தோனேசியப் பெண், எட்டி உதைக்கப்பட்டு, உடல் மீது சுடுநீர் ஊற்றப்பட்டதாகவும், சொல்லொண்ணா துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


