வீட்டில் வேலைக்கு அமர்த்ப்பட்டிருந்த ஓர் இந்தோனேசியப் பெண்ணை சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட புலன் விசாரணை முடிவடைந்த விட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து லாவகமாக தப்பி, கோலாலம்பூர் உள்ள இந்தோனேசியத் தூதகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ள 54 வயது இந்தோனேசியப் பெண் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் அந்த அரசியல்வாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ உமர் கான் குறிப்பிட்டார்.
அந்த இந்தோனேசியப் பெண், எட்டி உதைக்கப்பட்டு, உடல் மீது சுடுநீர் ஊற்றப்பட்டதாகவும், சொல்லொண்ணா துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


