தெமர்லோ, ஏப்ரல் 29-
தெமர்லோ, கிழக்கு கரையோர நெடுஞ்சாலையின் 98.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் மோட்டார் கைக்கிளோட்டி ஒருவருக்கு மரண விபத்தை ஏற்படுத்திய சம்பவ தொடர்பில் கைது செய்யப்பட்ட மாது ஒருவரின் தடுப்பு காவல் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விசாரணைக்கு உதவும் வகையில் 35 வயது அந்த மாது குற்றவியல் சட்டம் 304 (A) பிரிவின் கீழ் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அந்த தடுப்பு காவல் இன்று திங்கட்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் அம்மாதுவின் தடுப்பு காவல் நீடிக்கப்பட்டிருப்பதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் மஸ்லான் ஹாசன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் குறிப்பிடப்பட்ட நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த Mitsubishi Triton ரக கார் ஓட்டுநர் திடீரென்று வேகக்கட்டுப்பாட்டை குறைத்ததில் பின்புறத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த Suzuki GSX R1000 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வேகக்கட்டுப்பாடின்றி அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.








