Mar 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் நிலையத்தின் மீது பூந்தொட்டியை வீசிய இருவர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ் நிலையத்தின் மீது பூந்தொட்டியை வீசிய இருவர் கைது

Share:

சிலாங்கூர், ஜூன் 04-

சிலாங்கூர், செர்டாங்-ங்கில் நேற்று முன்தினம், செர்டாங் போலீஸ் நிலையத்தின் வேலியின் மீது பூந்தொட்டியை வீசியதாக சந்தேகிக்கப்படும் இரு பதின்ம வயது பையன்களைப் போலீஸ் கைது செய்துள்ளது.

17 வயதுடைய அவ்விருவரும் நேற்று மாலை மணி 4 அளவில் செரி கெம்பாங்கன்-னிலுள்ள தாமான் செர்டாங் ஜெயா-வில் கைது செய்யப்பட்டதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அன்பழகன் தெரிவித்தார்.

அவ்விருவரில் ஒருவர் மாணவர்; மற்றொருவர் வேலை ஏதும் செய்யவில்லை. பூந்தொட்டியை வீசி, சதிநாச வேலையில் ஈடுபட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அவ்விருவரும் தடுப்புக்காவலிடப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என அன்பழகன் கூறினார்.

தலைகவசங்களை அணியாததை, போலீஸ் உறுப்பினர் ஒருவர் கண்டித்ததால், அதிருப்திக்குள்ளான அவ்விருவரும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்த பூந்தொட்டிகளை தூக்கியெறிந்ததாக கூறப்படுகின்றது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி