Jun 10, 2026
Thisaigal NewsYouTube
மளிகைக் கடையில் வெளிநாட்டவரைத் தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மளிகைக் கடையில் வெளிநாட்டவரைத் தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் கைது

Share:

மளிகைக் கடை ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரைத் தாக்கியதுடன், கடையிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு உள்ளூர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 7 நாட்களுக்குப் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இந்த மோதலுக்குக் காரணம் எனத் திரெங்கானு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆயுதத்தைப் பயன்படுத்தி காயப்படுத்துதல் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது.

Related News