Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இஸ்ரேலிய பிரஜை  நாளை வெள்ளிக்கிழமை  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இஸ்ரேலிய பிரஜை நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 11 -

ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட ஓர் இஸ்ரேலிய பிரஜை, நாளை வெள்ளிக்கிழமை காலையில் கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

36 வயதுடைய அந்த இஸ்ரேலிய பிரஜை, மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டம், 7 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

அந்த இஸ்ரேலிய பிரஜை கைது தொடர்பில் பிடிபட்ட மேலும் 14 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்தார்.

ஆறு துப்பாக்கிகளை அந்த இஸ்ரேலிய பிரஜையிடம் விற்பனை செய்ததாக நம்பப்படும் கோலசிலாங்கூரைச் சேர்ந்த 43 வயது அசிம் மொஹாமாட் யாசின் மற்றும் அவரின் துணைவியார் 41 வயது சாயாரிஃபா ஃபாராஹா சியேட் ஹுசின் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை கிள்ளான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்