Mar 28, 2026
Thisaigal NewsYouTube
10 மாதக் குழந்தை தவறி விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

10 மாதக் குழந்தை தவறி விழுந்து மரணம்

Share:

சுங்கை பூலோ, ஜூன்.15-

பத்து மாத பெண் குழந்தை ஒன்று, குழந்தை பராமரிப்பாளரால் குளிப்பாட்டப்படும் போது தவறி விழுந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை புஞ்சாக் ஆலாம் பகுதியில் நடந்தது. சுங்கை பூலோ மாவட்ட காவல் துறைத் தலைவர், சுப்ரிண்டெண்டன் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர், குழந்தை மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே மயங்கிய நிலையில் இருந்ததாகவும், சுவாசம் இல்லாததால் சிகிச்சை பலனளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இச்சம்பவம், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை தொடர் விசாரணையில் உள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை