Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நீர் விநியோகம் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகம் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

திரங்கானு, மார்ச் 8 -

எல் நினோ தாக்கத்தினால் தற்போது நாடு வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையால் பாதிப்படைந்திருந்தாலும் திரெங்கானுவில் நீர் விநியோகம் இதுவரையில் பாதிப்படையாமல் சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.

மாநிலத்தில் உள்ள ஆறுகள் உட்பட நீர் அணைக்கட்டு தேக்கத்தின் நிலை இன்னும் சீராக இருப்பதால் மக்களுக்கு நீர் சென்றடைவதில் எந்தவொரு சிக்கலும் இதுவரையில் எதிர்நோக்கவில்லை என்று திரெங்கானு மந்திரி பெசார் டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

எல் நினோ தாக்கத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதை தவிர்க்க மாநில அரசாங்கம், ஷரிக்காட் அயிர் திரங்கானு சென்டிரியான் பெர்ஹாட் சாத்து நிறுவனத்தின் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அகமாட் சம்சூரி அறிவித்தார்.

இதுவரையில் நீர் விநியோக தடை எதுவும் ஏற்படாமல் சமாளிக்க முடிவதுடன் இந்த வறட்சி மேலும் தொடர்ந்தால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள தயாராக வேண்டும் காரணம் ரமடான் மாதத்திலும் ஹரி ராயாவிற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது நீரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அகமாட் சம்சூரி விவரித்தார்

வெப்ப காலம் அதிகரிக்க நீரின் பயனும் அதிகரிப்பதால் அதிகமானோர் நீரை பயன்படுத்த தொடங்குவர். இருந்தபோதிலும் சிக்கனமான அளவிலேயே நீரை பயன்படுத்தினால் மட்டுமே இந்த சிக்கலை தவிர்க்க முடியும் என்று நேற்று நடைபெற்ற திரெங்கானு தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான 30 ஆவது ஆண்டு விழாவில் அகமாட் சம்சூரி குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது