Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நீர் விநியோகம் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகம் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

திரங்கானு, மார்ச் 8 -

எல் நினோ தாக்கத்தினால் தற்போது நாடு வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையால் பாதிப்படைந்திருந்தாலும் திரெங்கானுவில் நீர் விநியோகம் இதுவரையில் பாதிப்படையாமல் சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.

மாநிலத்தில் உள்ள ஆறுகள் உட்பட நீர் அணைக்கட்டு தேக்கத்தின் நிலை இன்னும் சீராக இருப்பதால் மக்களுக்கு நீர் சென்றடைவதில் எந்தவொரு சிக்கலும் இதுவரையில் எதிர்நோக்கவில்லை என்று திரெங்கானு மந்திரி பெசார் டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

எல் நினோ தாக்கத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதை தவிர்க்க மாநில அரசாங்கம், ஷரிக்காட் அயிர் திரங்கானு சென்டிரியான் பெர்ஹாட் சாத்து நிறுவனத்தின் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அகமாட் சம்சூரி அறிவித்தார்.

இதுவரையில் நீர் விநியோக தடை எதுவும் ஏற்படாமல் சமாளிக்க முடிவதுடன் இந்த வறட்சி மேலும் தொடர்ந்தால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள தயாராக வேண்டும் காரணம் ரமடான் மாதத்திலும் ஹரி ராயாவிற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது நீரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அகமாட் சம்சூரி விவரித்தார்

வெப்ப காலம் அதிகரிக்க நீரின் பயனும் அதிகரிப்பதால் அதிகமானோர் நீரை பயன்படுத்த தொடங்குவர். இருந்தபோதிலும் சிக்கனமான அளவிலேயே நீரை பயன்படுத்தினால் மட்டுமே இந்த சிக்கலை தவிர்க்க முடியும் என்று நேற்று நடைபெற்ற திரெங்கானு தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான 30 ஆவது ஆண்டு விழாவில் அகமாட் சம்சூரி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்