Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது, நிந்தனைச் சட்டம் ஏன் பாயவில்லை
தற்போதைய செய்திகள்

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது, நிந்தனைச் சட்டம் ஏன் பாயவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 -

சண்டைக்கு தயாராக இருப்பதைப் போன்று வாளை ஏந்திக்கொண்டு நிற்கும் காட்சியைக்கொண்ட புகைப்படத்தை தனது முகநூலில் பதிவேற்றம் செய்து, உருட்டல், மிரட்டல் விடுத்து வரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் மீது இதுவரையில் நிந்தனைச் சட்டம் பாயாமல் இருப்பது ஏன் என்று செனட்டர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாள்- ளை ஏந்திக்கொண்டு, ஜப்பானில் எடுத்த அந்தப் புகைப்படத்தை தனது முகநூலில் டாக்டர் அக்மால் கடந்த மார்ச் 14 ஆம் தேதி பதிவேற்றம் செய்துள்ளார். அஞ்சி, அண்டி வாழ்வதைவிட எதிர்த்து நின்று சாவதே மேல் என்ற வாசகத்தையும் அந்த படத்தின் கீழ் டாக்டர் அக்மால் குறிப்பிட்டுள்ளதாக செனட்டர் தி லியான் கெர் சுட்டிக்காட்டினார்.

டிஏபி மூத்த தலைவர்லிம் கிட் சியாங், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் நாட்டின் பிரதமராக வர முடியும் என்று கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள்காட்டி பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேல் விசாரணை நடத்தினர்.

ஆனால், நீண்ட வாளை ஏந்திக்கொண்டு பகிரங்கமாக போஸ் கொடுத்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால்- இதுவரையில் ஏன் விசாரணை செய்யப்பட வில்லை, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, குறைந்த பட்சம் ஓர் எச்சரிக்கையைக்கூட ஏன் விடுக்கப்படவில்லை என்று டிஏபி-யைச் சேர்ந்த செனட்டர் தி லியான் கெர் கேள்வி எழுப்பினார்.

ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால், மிரட்டல் மட்டுமே விடுக்கப்படுவதாக நோக்கப்படவில்லை. மாறாக, கையில் நீண்ட வாள் ஏந்திக்கொண்டு இருக்கிறார். இது ஒரு தவறான முன்னுதாரணம் மட்டுமல்ல. இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக அந்த இளைஞர் பிரிவுத் தலைவர் முயற்சிக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. .

அந்த அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது நிந்தனை சட்டம் பாய வேண்டும் என்று செனட்டர் தி லியான் கெர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்