கோலாலம்பூர், மே 08-
ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளாகி தீவிர சிகிச்சைப் பெற்று வரும் ஹரிமாவ் மலாயா விளையாட்டாளரான பைசால் ஹலீம், விரைவில் குணமடைந்து மீண்டும் காற்பந்து ஆட்டத்தில் களமிறங்க வேண்டும் என்று தாம் பிராத்திப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தம்மை பிரதிநிதித்து, அரசியல் செயலாளரான அஹ்மத் ஃபர்ஹான் ஃபௌஸி பாதிக்கப்பட்ட நபரை நேரில் சென்று சந்தித்து வருமாறு தமது முகநூல் அகப்பக்கத்தில் ஒரு செய்தியை பிரதமர் அன்வார் வெளியிட்டுள்ளார்.
அச்செய்தியில் காற்பந்து விளையாட்டாளரான பைசால் ஹலீம் விரைவில் குணமடைந்து தமது போராட்டத்தை தொடர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, Damansara -வில் உள்ள ஒரு பேரங்காடியில் பைசால் ஹலீம், ஆசாமிகளால் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளாகி தற்போது ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








