Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சுட்டுக்கொல்லப்பட்ட ஐவர், 50 க்கும் மேற்பட்ட ஆயுதம் தங்கிய கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சுட்டுக்கொல்லப்பட்ட ஐவர், 50 க்கும் மேற்பட்ட ஆயுதம் தங்கிய கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர்

Share:

சுபாங் ஜெயா, மார்ச் 30-

சுபாங் ஜெயா, பெர்சியாறன் ஹர்மோனி, புத்ரா ஹெயிட்ஸ்- ஸில் நேற்றிரவு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்கள், கிள்ளான் பள்ளத்தாக்கில் குறைந்த பட்சம் 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கி மற்றும் வெட்டுக்கத்தி தாங்கிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று போலீசார் நம்புகின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு சம்பளப் பணத்தை எடுத்துச் செல்லும் வாகனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் ஆகியவற்றை இலக்காக கொண்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கும்பல், கொள்ளைச் சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஷா ஆலம், பூச்சோங், கிள்ளான், சுபாங் ஜெயா, காஜாங், செந்தூல் முதலிய பகுதிகளில் இக்கும்பல் கொள்ளையிட்டு வந்ததற்கான 50 க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்தியர்கள் என்று நம்பப்படும் 25 க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஐந்து நபர்களும் நேற்று இரவு 11.30 மணியளவில் புத்ரா ஹெயிட்ஸ்- ஸில் பெரோடுவா அக்சியா காரில் சென்று கொண்டிருந்த போது, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக சிலாங்கூர் மாநில போலீசார் டத்தோ ஹுசைன் ஓமர் கான் இன்று நண்பகலில் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் செய்தியாளர்கள் கூட்டம் தொடர்பில் மாலை 4.20 மணி வரையில் எந்தவொரு தகவலும் இல்லை.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு