Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் கடைகளை இடித்த டிபிகேஎல்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் கடைகளை இடித்த டிபிகேஎல்

Share:

புக்கிட் பிந்தாங் ஜாலான் ன்யொன்யா ஒஃப் ஜாலான் சங்காட் தம்பி டோலாவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த கடைகளை கோலாலம்பூர் மாநகர் மன்றம் இடித்தது.

முன்னதாக டிபிகேஎல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வெளியேற்ற ஆணையை அக்கடைகளின் உரிமையாளர்கள் மீறியதால் அவை இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்டக் கடைகள் பொதுப் பாதையில் அனுமதியின்றி செயல்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிபிகேஎல் குறிப்பிட்டது.

ஆயிர் சிலாங்கூர், தெனாகா நேஷ்னல் பெர்ஹாட் ஆகிய தரப்புடன் காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சாலைகள், வடிகால், கட்டடங்கள் சட்டம் 1974 [இரிவு 46இன்படி டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்ததாக மாநகர் மன்றம் தமது முகநூல் பதிவில் தெரிவித்தது.

சட்டத்திற்குப் புறம்பான கடையைக் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தால் அதனை கடை முதலாளிகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் இல்லை யென்றால் அக்கடை இடித்துத் தள்ளப்படும் எனவும் அப்பதிவில் டிபிகேஎல் கூறியது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு