Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு கட்டாய இபிஎப் சந்தா: இன்று அக்டோபர் முதல் தேதி தொடங்கியது
தற்போதைய செய்திகள்

மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு கட்டாய இபிஎப் சந்தா: இன்று அக்டோபர் முதல் தேதி தொடங்கியது

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.01-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப், மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் கட்டாய இபிஎப். சந்தா திட்டத்தை இன்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கியது.

அந்நிய நாட்டுத் தொழிலார்களுக்கான இபிஎப். சந்தா, இந்த அக்டோபர் மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இந்தப் புதிய கொள்கையின் கீழ் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் மாதச் சம்பளத்தில் தலா 2 விழுக்காடு இபிஎப். சந்தா செலுத்த வேண்டும் என்று இபிஎப். வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

மலேசிய குடிநுழைவுத்துறையினால் வழங்கப்பட்ட செல்லத்தக்க வேலை பெர்மிட் மற்றும் கடப்பிதழைக் கொண்டுள்ள அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு இபிஎப். சந்தா, அவர்களின் சம்பளத்தில் கட்டாயம் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர் ஒருவருக்கு அவரின் சம்பளத்தில் 2 விழுக்காடு இபிஎப். சந்தா வெட்டப்படும் அதே வேளையில் அந்த தொழிலாளருக்கு தனது பங்காக முதலாளிமார்கள் தலா 2 விழுக்காடு சந்தா வழங்கப்பட வேண்டும்.

அந்நிய நாட்டவர்களைக் கொண்டுள்ள வீட்டுப் பணியாளர்களைத் தவிர மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்யும் அந்நிய நாட்டவர்கள் அனைருக்கும் இந்த இபிஎப். காப்பீடு பொருந்தும் என்று இபிஎப். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து