Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு கட்டாய இபிஎப் சந்தா: இன்று அக்டோபர் முதல் தேதி தொடங்கியது
தற்போதைய செய்திகள்

மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு கட்டாய இபிஎப் சந்தா: இன்று அக்டோபர் முதல் தேதி தொடங்கியது

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.01-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப், மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் கட்டாய இபிஎப். சந்தா திட்டத்தை இன்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கியது.

அந்நிய நாட்டுத் தொழிலார்களுக்கான இபிஎப். சந்தா, இந்த அக்டோபர் மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இந்தப் புதிய கொள்கையின் கீழ் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் மாதச் சம்பளத்தில் தலா 2 விழுக்காடு இபிஎப். சந்தா செலுத்த வேண்டும் என்று இபிஎப். வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

மலேசிய குடிநுழைவுத்துறையினால் வழங்கப்பட்ட செல்லத்தக்க வேலை பெர்மிட் மற்றும் கடப்பிதழைக் கொண்டுள்ள அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு இபிஎப். சந்தா, அவர்களின் சம்பளத்தில் கட்டாயம் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர் ஒருவருக்கு அவரின் சம்பளத்தில் 2 விழுக்காடு இபிஎப். சந்தா வெட்டப்படும் அதே வேளையில் அந்த தொழிலாளருக்கு தனது பங்காக முதலாளிமார்கள் தலா 2 விழுக்காடு சந்தா வழங்கப்பட வேண்டும்.

அந்நிய நாட்டவர்களைக் கொண்டுள்ள வீட்டுப் பணியாளர்களைத் தவிர மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்யும் அந்நிய நாட்டவர்கள் அனைருக்கும் இந்த இபிஎப். காப்பீடு பொருந்தும் என்று இபிஎப். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்