Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இரு உதவி சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு உதவி சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

Share:

கடந்த 2020 ஆம் ஆண்டில் 4,300 வெள்ளி லஞ்சம் பெற்றதாக இரண்டு உதவி மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் Kota Bharu Sesyen நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டனர்.

34 வயது Mohd Faizul Mat Nasir மற்றும் Mohamad Rasul Mohd Zukri என்ற அந்த இரு உதவி அதிகாரிகளும் நீதிபதி Ahmad Bazli Bahruddin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை அல்லது 10,000 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 24 (1) பிரிவின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் Kuala Lumpur அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோவிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சரக்கு லாரிகளை சோதனையிடாமல் இருப்பதற்கு 38 வயது அந்த நிறுவன உரிமையாளரிடம் குறிப்பிட்ட தொகையை லட்சமாக பெற்றதாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் மறுவிசாரணை வருகின்ற ஜுலை 21 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி