குவா முசாங், ஏப்ரல் 30-
கிளாந்தான், குவா முசாங்கில் புதர் ஒன்றில் உயிரிழந்த நிலையில், ஓய்வு பெற்ற இராணுவ வீரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
48 வயதுடைய வான் யூசோப் வான் ஜாபர் எனும் அவ்வாடவரின் சடலம், நேற்று மாலை மணி 2.30 அளவில், அவர் செலுத்திய சைக்கிளுக்கு அருகே, படுத்திருந்த நிலையில் மீட்கப்பட்டதாக, குவா முசாங் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.
நேற்று காலை 8 மணியளவில் அவர் பொழுதை கழிப்பதற்காக, சைக்கிளில் சென்றுள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமான நேரத்தில் வீடு திரும்பாததால், அவரது மனைவி அவ்வாடவரின் கைப்பேசிக்கு தொடர்புக்கொண்டும் பதில் கிடைக்கவில்லை என்று சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
பின்னர், அவ்வாடவர் சடலமாக மீட்கப்பட்ட வேளை, உடற்கூறு ஆய்வில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டதாக சிக் சூன் ஃபூ கூறினார்.








