கார் மோதியதில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் ஜொகூர், குளுவாங், ஜாலான் யொங் பெங்-குளுவாங் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. இதில் 50 வயதுடைய கந்தன் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
நிசான் சென்ட்ரா வாகனம், அந்தக் காரிருளில், பாலோவிலிருந்து குளுவாங்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியைச் சரியாக கவனிக்காததைத் தொடர்ந்து இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர், எ.சி.பி. பஹ்க்ரின் முகமட் நோஹ் தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


