கார் மோதியதில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் ஜொகூர், குளுவாங், ஜாலான் யொங் பெங்-குளுவாங் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. இதில் 50 வயதுடைய கந்தன் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
நிசான் சென்ட்ரா வாகனம், அந்தக் காரிருளில், பாலோவிலிருந்து குளுவாங்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியைச் சரியாக கவனிக்காததைத் தொடர்ந்து இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர், எ.சி.பி. பஹ்க்ரின் முகமட் நோஹ் தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


