கார் மோதியதில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் ஜொகூர், குளுவாங், ஜாலான் யொங் பெங்-குளுவாங் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. இதில் 50 வயதுடைய கந்தன் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
நிசான் சென்ட்ரா வாகனம், அந்தக் காரிருளில், பாலோவிலிருந்து குளுவாங்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியைச் சரியாக கவனிக்காததைத் தொடர்ந்து இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர், எ.சி.பி. பஹ்க்ரின் முகமட் நோஹ் தெரிவித்துள்ளார்.

Related News

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது


