கடந்த மார்ச் 3-ஆம் தேதி கோம்பாக் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், வாகனம் ஒன்றில் இருந்து 5.25 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 105 கிலோக்கும் மேற்பட்ட சயாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், உள்ளூர் ஆடவரும், ஆலய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து கேன்வாஸ் பைகளில் அடுக்கப்பட்டிருந்த சயாபு போதைப்பொருளை கொண்ட 64 பிளாஸ்டிக் பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் இருக்க கூரியர் விநியோக சேவைகள் மூலம் இந்த போதைப் பொருட்களானது அனுப்பப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.








