சரவாக், மே 27-
சரவாக், கூச்சிங்கில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய தேசிய ஊடகவியலாளர் கொண்டாட்ட தினம் - ஹவானா 2024 இன்று இறுதிநாளை எட்டிவிட்ட நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதில் பங்கேற்கவுள்ளார்.
மாலை மணி 3க்கு நடைபெறவுள்ள அக்கொண்டாட்டத்தின் உச்ச நிகழ்ச்சியில் உரையை வழங்கவிருக்கும் பிரதமர், ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கவிருப்பதோடு, தாபுங் காசிஹ்@ஹவானா -வின் கீழ் தேவைபடுவோருக்கு உதவிகளையும் வழங்கவுள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியில், சரவாக் பிரீமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங், தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் உள்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.








