கிரிப்டோ நாணயம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தனிநபர் ஒருவரிடம் 12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி கேட்டு, மிரட்டியது தொடர்பில் ஐந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புலன் விசாரணை அறிக்கை, நாளை வியாழக்கிழமை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான தடுப்புக்காவல் கெடு, முடிவடைந்தததும் மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஐந்து போலீஸ் அதிகாரிகள் தொடர்பான அறிக்கையை தாமோ அல்லது போலீஸ் படைத் தலைவராக வெளியிடக்கூடும் என்று இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் இதனை குறிப்பிட்டார்.








