Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஆட்டிசம் குறைபாடு கொண்ட சிறுமி நீரில் மூழ்கினார்
தற்போதைய செய்திகள்

ஆட்டிசம் குறைபாடு கொண்ட சிறுமி நீரில் மூழ்கினார்

Share:

பினாங்கு, ஜூன் 04-

பினாங்கு, கேபாலா பாத்தாஸ், பெர்டாம், நீர் விளையாட்டுப் பூங்காவில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஐந்து வயது சிறுமி, நீரில் மூழ்கி பரிதாபமாக மாண்டார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் குடும்ப உறுப்பினர்களுடன் உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த தனது மகள், தனது நேரடிப் பார்வையிலிருந்து திடீரென்று காணாமல் போனதாக அந்த அந்த சிறுமியின் தாயார் தெரிவித்ததாக செபராங் பெராய் உத்தாரா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுல்கிஃப்லீ சுலைமான் தெரிவித்தார்.

நீரில் விளையாடிக்கொண்டு இருந்த தனது மகள் காணாமல் போனது குறித்து அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் உள்ள பணியாளர்களிடம் அந்த மாது தெரிவித்து இருக்கிறார்.

அந்த ஐந்து வயது சிறுமியை தேடும் பணி துரித வேகத்தில் முடுக்கி விட்ட நிலையில் சிறிது நேரம் கழித்து, அந்த சிறுமியின் உடல், அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் இன்னும் கட்டுமானத்தில் இருந்து வரும் ஒரு குளத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக சுல்கிஃப்லீ சுலைமான் குறிப்பிட்டார்.

பின்னர் அந்த சிறுமியின் உடல் நீரின் மட்டத்தில் சுமார் ஒரு மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது. சவப்பரிசோனைக்காக அந்த சிறுமியின் உடல் கேபாலா பாத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி