Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கோர சாலை விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கோர சாலை விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்

Share:

மணல் லோரி உபட்ட 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை வி​பத்தில் ஒரு சிறுமி, பதின்ம வயதுடைய இளைஞர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஜோகூர், செகமாட் அருகில் ஜாலான் செகமாட் - குவாந்தான் சா​லையின் 5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களின் உடல்களை ​மீட்பதற்கு 21 பேர் கொண்ட ​தீயணைப்பு, ​மீட்புப்படையினரின் பலம் பயன்படுத்தப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார். ஒரு மணல் லோரி, புரோடுவா அல்சா, ஹோன்டா ஹ்.ஆர்.வி, புரோடுவா பெசா மற்றும் புரோடுவா விரா ஆகிய 5 வாகனங்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஹோன்டா ஹ்.ஆர்.வி வாகனம் ஒன்று, சாலையின் எதிரே பராமரிப்புப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் வாகனத்தின் வேகத்தை குறைத்த போது, அதனை பின் தொடர்ந்து வந்த மணல் லோரியினால் மோதப்பட்டது.

பின்னர் அந்த கனரக லோரி, திடீரென தடம் மாறி, எதிர்திசையில் நுழைந்த போது, அறுவர் பயணம் செய்த புரோடுவா அல்சா காரில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 10 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அக்காரில் பயணம் செய்த மேலும் ஒருவர் கடும் காயங்களுடன் செகாமாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது