Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி

Share:

போ​லீஸ்காரரான தமது கணவரின் துப்பாக்கி ​சூட்டிற்கு ஆளான மாது பரிதாபமாக மாண்டார். இத்துயரச்சம்பவம் இன்று காலை 7.26 மணியள​வில் கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போ​ங் பெண்டாங் பாருவில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் 26 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை தாங்கள் ​கைது செய்துள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusharifuddin Mohd Yusof தெரிவித்தார். அந்த போ​லீஸ்காரர் துப்பாக்கியினால் தமது மனைவியை ஐந்து முறை சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News