Jul 28, 2026
Thisaigal NewsYouTube
SST வரியின் புதிய விகிதத்தை அரசு ஆராய வேண்டும்
தற்போதைய செய்திகள்

SST வரியின் புதிய விகிதத்தை அரசு ஆராய வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

பல்வேறு துறைகளுக்கு ஸ்.ஸ்.தி விற்பனை சேவை வரி வகிதத்தை 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்த்தியிருக்கும் அரசாங்கத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சரும், பக்காத்தான் ஹராப்பான் Bagan எம்.பி.யுமான லிம் குவான் எங் கேட்க்கொண்டுள்ளார்.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள ஸ்.ஸ்.திவரியின் புதிய விதத்தினால் மக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் சுமை ஏற்றப்பட்டு இருப்பதால் அது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று லிம் குவான் எங் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

ஒரு நாட்டின் பொருளில் வளர்ச்சிக்கு வரி விதிப்பு இன்றியமையாததாகும். ஆனால் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப்பெற்றப் பின்னர் இது போன்ற வரி விதிப்பை அறிமுகப்படுத்தலாம். தற்போதைய சூழ்நிலையில் வரி விதிப்பு உயர்வை அனுமதிக்க வில்லை என்று லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

ஸ்.ஸ்.தி வரி மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கான வரி உட்பட அனைத்து வகையான புதிய வரிகளையும் அரசாங்கம் மீள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த வரிகளினால் மக்களுக்கு சுமை ஏற்படும் என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த வரி விதிப்பை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்