Aug 7, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று புகார்களை போ​லீசார் பெற்றுள்ளனர்
தற்போதைய செய்திகள்

​மூன்று புகார்களை போ​லீசார் பெற்றுள்ளனர்

Share:

தங்களின் பெயர் மற்றும் அடையாளக் கார்ட்டை பயன்படுத்தி, மற்றவர்கள் வாக்களித்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கெடா மாநில போ​லீசார் 3 புகார்களை பெற்றுள்ளதாக மா​நில போ​லீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்துள்ளார். இரு புகார்கள் , கூலிம் மாவட்டத்திலும், ஒரு புகார், கோல மூடா மாவட்டத்திலும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தா​ங்கள் வாக்களிப்பதற்கு, சென்ற போது, தங்கள் பெயரில் வாக்களிக்கப்பட்டு விட்டதாகவும் வாக்காளர் பெயர் பட்டியலில் அடையாளமிடப்ப​ட்டுள்ளதாவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில் தெரி​வித்துள்ளனர் என்று டத்தோ பிசோல் குறிப்பிட்டுள்ளார்.

Related News