பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார், அடுத்த வாரம் நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டிற்குப் பிறகு தனது பொறுப்புகளிலிருந்து தற்காலிக விடுப்பு எடுக்க உள்ளார்.
நூருல் இசா, தனது பதவியிலிருந்து முழுமையாக விலகவே விருப்பம் தெரிவித்தார். இருப்பினும், அவர் தற்காலிகமாக விடுப்பில் செல்ல கட்சியின் மத்திய தலைமைத்துவம் அனுமதி அளித்துள்ளதாக பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நூருல் இசா விடுப்பில் இருக்கும் இடைப்பட்ட காலத்தில், கட்சியின் துணைத் தலைவர் பொறுப்புகளை பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கவனிப்பார். மற்றொரு உதவித் தலைவரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கட்சியின் தேர்தல் இயக்குநராக முழுப் பொறுப்பையும் ஏற்பார் என்று டத்தோஸ்ரீ பாஹ்மி குறிப்பிட்டார்.








