Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் மாநிலம் குளுவாங்கில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி, தான் பெற்றெடுத்த பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயது மாணவியான நூர்ஷஸ்வென் இட்ரிஸ், குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி நூராசிடா ஏ ரஹ்மான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட இவ்வழக்கு கொலை வழக்கு என்பதால், அவரிடம் குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.

இச்சம்பவமானது தாமான் செத்தியா முத்தியாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.

இரசாயனப் பரிசோதனை, உளவியல் மதிப்பீடு மற்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கைகள் கிடைக்க வேண்டியுள்ளதால், வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி