கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் கூறி வருவதைப் போன்று 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டவிதிகளை தாம் மீறியதாக கூறப்படுவதை பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ மறுத்துள்ளார்.
இந்த இடைத் தேர்தல் பிரச்சார காலக்கட்டம் முழுவதும் தாமோ தமது தரப்பினரோ தேர்தல் சட்டத்திற்கு உட்பட்டே தங்களின் பிரச்சார நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக பாங் சாக் தாவோ குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் இந்த தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் இதுவரையில் சட்டத்தை பின்பற்றியே நடந்துள்ளது என்று தாம் நம்புவதாக பாங் சாக் தாவோ தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கோலகுபு பாரு, அரச மலேசிய போலீஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பு நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாங் சாக் தாவோ இதனை தெரிவித்தார்.
இதனிடையே இன்று நடைபெற்ற போலீஸ்காரர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் சம்பந்தபட்ட முன்கூட்டியே வாக்களிப்பு, சுமூகமாகவும், முறையாகவும் நடைபெற்றது குறித்து டிஏபி சார்பாக போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ தமது மனநிறைவை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பாங் சாக் தாவோ குறிப்பிட்டார்.








