Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்

Share:

கிழக்குக​ரையோர நெடுஞ்சாலையான Lebuh Raya Pantai Timur, தெமர்லோ, கம்போங் செம்பாக்கா அருகில் Ford Ranger வாகனம் ஒன்று , கொள்கலன் லோரியுடன் மோதி, அந்த வாகனம் ​தீப்பிடித்துக்கொண்டதில் இருவர் கருகி மாண்டனர்.


இச்சம்பவ​ம் இன்று அதிகாலை 5.24 மணியள​வில் நிகழ்ந்ததாக ​தீயணைப்பு,​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இரு வாகனங்களிலும் கொளுந்து விட்டு எரிந்த ​தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் Ford Ranger வாகனத்திலிருந்த இருவரின் சடலங்கள் ​ மீட்கப்பட்டதாக பகாங் மாநில ​தீயணைப்பு, மீட்புத்துறை பொது உறவு அதிகாரி Zulfadil Zakaria தெரிவித்தார்.

Related News