Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் உலாமா தலைவரை சாடினார் DAP எம்.பி.
தற்போதைய செய்திகள்

பாஸ் உலாமா தலைவரை சாடினார் DAP எம்.பி.

Share:

நோன்பு மாத காலத்தில் பள்ளிகளின் சிற்றுண்டி சாலைகள் வழக்கம் போல் செயல்படும், அவற்றை மூட வேண்டிய அவசியமில்லை, முஸ்லிம் அல்லாத மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ள கல்வி அமைச்சர் Fadhlina Sidek- கை குறைகூறிருக்கும் பாஸ் கட்சியின் மத்திய உலாமா தலைவர் Ahmad Yahaya-வை DAP Bangi நாடாளுமன்ற உறுப்பினர் Syahredzan Johan இனறு கடுமையாக சாடினார்.

முஸ்லிம் அல்லாத மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் என்ன தவறு என்று Syahredzan Johan கேள்வி எழுப்பினார். பாஸ் உலாமா தலைவர், வேண்டுமென்றே இவ்விவகாரத்தை சமயத்துடன் தொடர்புபடுத்தி, அரசியலாக்க முயற்சிக்கிறார் என்று Syahredzan Johan குற்றஞ்சாட்டினார்.

புனித நோன்பு மாதத்தை மதிக்காததைப் போல கல்வி அமைச்சர் Fadhlina Sidek- நடந்து கொள்கிறார் என்று பாஸ் கட்சியின் உலாமா தலைவர் Ahmad Yahaya கூறியிருப்பது மற்றவர்களுக்கு வெறுப்புணர்வை ​தூண்டி விடும் செயலாகும் என்று Syahredzan Johan வர்ணித்தார்.

நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் திறக்கப்படுவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. குறிப்பாக பள்ளிக்கு வருகின்ற முஸ்லிம் அல்லாத மாணவர்களும், ஆசிரியர்களும் அவற்றை பயன்படுத்தும் நிலை இருக்கிறது.

கடந்த காலங்களில் நோன்பு மாத காலத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் மூடப்பட்டதால் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் தா​ங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை பள்ளியின் கழிப்பறையில் உண்ட கசப்பான சம்பவத்தை ​மீண்டும் காண விரும்புகிறாரா? பாஸ் கட்சியின் உலாமா தலைவர் என்று Syahredzan Johan வினவினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்