Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அனாமதேய அழைப்பை புறக்கணியுங்கள்
தற்போதைய செய்திகள்

அனாமதேய அழைப்பை புறக்கணியுங்கள்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அடுத்த வாரம் நோன்புப்பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் வேளையில் அடையாளம் தெரியாத நபர்களின் கைப்பேசி அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் பொதுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களின் கைப்பேசி அழைப்பை எடுத்து ஒரு நிமிடம் வைத்திருந்தால்கூட கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான வெள்ளியை நமது வங்கி கணக்கிலிலிருந்து இழக்கும் அபாயம் உள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமைய வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமத் யுசோப் நினைவுறுத்தியுள்ளார்.

Related News