Mar 19, 2026
Thisaigal NewsYouTube
எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின
தற்போதைய செய்திகள்

எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின

Share:

ஜோகூர், மார்ச் 28 -

ஜோகூர், பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் ரிந்திங் கிற்கு செல்லும் பகுதியில் எட்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியது.

இன்று காலை 11.43 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்ததாக அதன் செயலாக்க கொமான்டெர், அன்வார் அப்துல்லா தெரிவித்தார்.

Fuso ரகத்திலான ஒரு லோரி, ஒரு Triton ரக வாகனம், ஒரு ம்.பி.வி வாகனம், போரோடுவா விவா ரகத்தைச் சேர்ந்த மூன்று கார்கள், ஒரு ஹொன்டா சிட்டி மற்றும் ஒரு மினி கூப்பர் ஆகிய வாகனங்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யாரும் காயமின்றி, தத்தம் வாகனங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை