வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு விசா வெளியீட்டில் முறைகேடு புரிந்ததாக சந்தேகிக்கப்படும் டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணிபுரிந்த இரு மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் பிடிபட்டதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும், குடிநுழைவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பலாபலனாகும்.
மலேசியாவிற்குள் சுலபமாக நுழைவதற்கு வங்காள தேசப்பிரஜைகளிடம் லஞ்சம் பெற்று, விசா வெளியிடப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தூதரகத்தில் பணியாற்றிய அந்த இரு அதிகாரிகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வந்ததாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசொஹ் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்காக அந்த இரு அதிகாரிகளும் டாக்காவிலிருந்து தாயகம் திரும்பும்படி உத்தரவிடப்பட்டனர். அவர்கள் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கோலாலம்பூர் வந்து சேர்ந்த போது எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டனர் என்று ருஸ்லின் ஜூசொஹ் குறிப்பிட்டார்.
லஞ்சத்தின் வாயிலாக அவர்கள் ஈட்டியதாக நம்பப்படும் 31 லட்சம் வெள்ளி சொத்துகள் எஸ்.பி.ஆர்.எம். மினால் முடக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


