வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு விசா வெளியீட்டில் முறைகேடு புரிந்ததாக சந்தேகிக்கப்படும் டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணிபுரிந்த இரு மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் பிடிபட்டதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும், குடிநுழைவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பலாபலனாகும்.
மலேசியாவிற்குள் சுலபமாக நுழைவதற்கு வங்காள தேசப்பிரஜைகளிடம் லஞ்சம் பெற்று, விசா வெளியிடப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தூதரகத்தில் பணியாற்றிய அந்த இரு அதிகாரிகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வந்ததாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசொஹ் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்காக அந்த இரு அதிகாரிகளும் டாக்காவிலிருந்து தாயகம் திரும்பும்படி உத்தரவிடப்பட்டனர். அவர்கள் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கோலாலம்பூர் வந்து சேர்ந்த போது எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டனர் என்று ருஸ்லின் ஜூசொஹ் குறிப்பிட்டார்.
லஞ்சத்தின் வாயிலாக அவர்கள் ஈட்டியதாக நம்பப்படும் 31 லட்சம் வெள்ளி சொத்துகள் எஸ்.பி.ஆர்.எம். மினால் முடக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

பத்துகாஜாவில் முன்னாள் காதலியின் காதலரை கொலை செய்தவர் மீது கொலை குற்றச்சாட்டு

லகாட் டத்துவில் முக்குளிப்பு விளையாட்டின் போது விபரீதம் - ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

புதிய கட்சி பெயர் மாற்றம் மட்டுமே கண்டதாக ஹம்சா ஜைனுதின் தகவல்

பஞ்சாப் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த இருவரை நாடு கடத்தியது மலேசியா / புக்கிட் அமான் சிறப்பு நடவடிக்கை

தேசிய ஸ்குவாஷ் மைய திட்ட ஊழல் வழக்கு: பிஎஸ்எம் தலைமைச் செயலதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்


