Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் களமிறங்கக்கூடிய வேட்பாளர்களை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளதாக, பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமை செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆலோசனை மன்றக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அந்த பெயர் பட்டியல் ஒப்படைக்கப்படுமென அவர் கூறினார்.

உயர்மட்ட தலைவர்கள் முடிவெடுப்பதற்கு முன்பதாக, அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த வேட்பாளர்கள் குறித்து கருத்துரைக்க முடியாது என்றாரவர்.

சம்பந்தப்பட்ட வேட்பாளர் கட்சியை பிரதிநிதிக்காமல் ஒற்றுமை அரசாங்கத்தின் மொத்த பிரதிநிதியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பாகும்.

அரசாங்கத்திலுள்ள கட்சி பணிப்படைகள் அனைத்தும் ஒன்றிணைந்த கடப்பாட்டுடன் செயல்படும். ஒற்றுமை அரசாங்கத்திற்கு வெற்றியைப் பெற்று தருவதே தங்கள் எண்ணம் என டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் கூறினார்.

Related News