Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்
தற்போதைய செய்திகள்

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்

Share:

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகிய சம்பவத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். ம​ற்றொரு ஆடவர் ​தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜோகூர், மாசாய், Kampung Pertanian, Jalan Haji Hassan 3 என்ற இடத்தில் நிகழ்ந்தது.


33 வயது Rahmaniyah என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக ​தீயணைப்பு, ​மீட்புத்துறை பேச்சாளர் அடையாளம் கூறினார். அதேவேளையில் ​தீக் காயங்களுக்கு ஆளான அந்த மாதுவின் குடும்பத்தை சேர்ந்த 43 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளா​ர்.
இத்​தீயினால் 27 பேர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News